When there is so much one can do with one’s money, why buy noise and pollution?
There is so much one can do on Diwali.
Buy and listen to all
the noise music one loves (instead of noise).
Spend more than one ordinarily would, buy
new clothes, shoes, bags or a whole new wardrobe?
Draw
rangoli, buy
new curtains, light up one’s house. Change the entire look of one’s room.
Buy
books, buy eBooks. (Or download free eBooks from
here and
here). Read the books one has been meaning to.
Indian Home Maker in her blog..
Here.
Translation of the same in Tamil (I have added some more options):
அந்தப் பணத்தைக் கொண்டு உங்களால் எவ்வளவோ செய்ய முடிகின்றபோது அதனை ஏன் எரித்து அழிக்க வேண்டும்?
தீபாவளி அன்று நீங்கள் எவ்வளவோ செய்யலாம்.
- காதைப் பிளக்கின்ற சத்தத்தைக் கேட்டு காதுகளில் விரல் வைத்து அலறுவதை விட இரண்டு சிடிகளை வாங்கி இசையைக் கேட்டு ரசிக்கலாமே.
- பட்டாசுகளாகக் கொளுத்தி எரிப்பதை விட அதனைக் கொண்டு துணிகளையும் காலணிகளையும் கைப்பைகளையும் வாங்கி கொடுத்து மகிழலாமே.
- புதியதாக படுக்கை விரிப்புகளை வாங்கலாமே. திரைச் சீலைகளை வாங்கி அறையை அழகுபடுத்தலாமே.
- வாழ்வுக்கு அழகு சேர்க்கும் புத்தகங்களை வாங்கி வாசிக்கலாமே. மின் நூல்களை வாங்கலாமே. இந்தத் தளங்களில் எல்லாம் நல்ல நல்ல நூல்கள் கிடைக்கின்றன.
- புதியதாக அலைபேசி வாங்கலாமே. அல்லது வேறு எவருக்காவது அலைபேசியை அன்பளிப்பாகக் கொடுத்து மகிழலாமே.
- பசித்த ஏழைகளுக்கு உண்ண உணவு கொடுத்து மகிழலாமே.
- துணிமணிகளை வாங்கி மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழலாமே.
- அனாதை இல்லங்களுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் நன்கொடைகள் கொடுத்து மகிழலாமே.
- மக்களின் பயன்பாட்டுக்காக நூலகங்களுக்கு நல்ல நல்ல நூல்கள் வாங்கி அன்பளிப்-பாகக் கொடுக்கலாமே.
- சாலையோரம் நிழல் தருகின்ற மரங்களை நடலாமே.
- ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகளைக் கொடுத்து மகிழலாமே.
- பத்து நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்வதற்காக உதவி செய்யலாமே. கண் புரை நோயாளிகளுக்கு உதவலாமே.