Pages

Showing posts with label Aloor Shanawas. Show all posts
Showing posts with label Aloor Shanawas. Show all posts

Wednesday, November 30, 2011

இராஜாஜியின் குலக்கல்வித் திட்டமும் ஜெயலலிதாவும்


1969 ஜனவரி 20 ஆம் நாள்...
உடல் நலிவுற்று சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அண்ணா.
உற்சாகம் ததும்ப புன்னகை பூத்த முகத்துடன் மருத்துவமனையில் வந்து இறங்கிய அண்ணா, ஏராளமான புத்தகங்களுடன் உள்ளே நுழைந்தார்.

அங்கு அவர் தங்கியிருந்து சிகிச்சை பெறும் வகையில் ஏ.சி அறைக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
அவரை அங்கும் இங்கும் அழைத்துச் செல்ல சக்கர நாற்காலி தயாராக இருந்தது.
அமெரிக்காவிலிருந்தும் பம்பாயிலிருந்தும் புற்றுநோய் நிபுணர்கள் வரவழைக்கப் பட்டனர்.
அண்ணாவுக்கு என்ன ஆகுமோ, ஏதாகுமோ என்ற பதைபதைப்பில் தமிழக மக்கள் ஆழ்ந்தனர்.
மருத்துவமனையின் ஒவ்வொரு அசைவுகளையும் ஊடகங்கள் செய்தியாக்கிக் கொண்டிருந்தன.
திமுக பொருளாளர் சாதிக் பாட்சா தமது அறிக்கைகளின் மூலம் அண்ணாவின் நிலை பற்றிய அறிவிப்புகளை செய்து கொண்டிருந்தார்.
இத்தனை பரபரப்பும் பதற்றமும் சூழ்ந்து நிற்க அண்ணா மட்டும் அமைதியாக, தாம் கொண்டுவந்த புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தார்.உயிர் போகும் வேளையில் கூட வாசிப்பை நிறுத்தாத அன்றைய முதல்வர் எங்கே..?
உலகத் தரத்துடன் கூடிய ஒரு வாசிப்புச் சாலையை உருக்குலைக்க நினைக்கும் இன்றைய முதல்வர் எங்கே..?

புற்றுநோய் முற்றிய நிலையிலும் புத்தகங்களோடு வந்திறங்கி, மருத்துவமனையைக் கூட நூலகமாக மாற்றினார் அன்று அண்ணா!
என்ன நோய் முற்றியதோ தெரியவில்லை, அந்த அண்ணாவின் பெயரால் அமைந்த அழகிய நூலகத்தை மருத்துவமனையாக மாற்றத் துடிக்கிறார் இன்று அம்மா!
Aloor Shanawaz at his best. Here

Thursday, February 03, 2011

வடிவேலு, முஸ்லிம்கள் & சினிமா


வடிவேலு எனும் நகைச்சுவை நடிகர், திரையில் வாய்திறந்து சொல்வதெல்லாம் தமிழ்நாட்டு மக்களின் பேச்சு வழக்காக மாறிப்போகின்ற அதிசயம் நிகழ்ந்து வருவதை நாம் அனுபவ ரீதியாக கண்டு வருகிறோம். நம் வீட்டு பிஞ்சுக் குழந்தைகள்கூட வடிவேலுவின் டயலாக்குகளைப் பேசி மகிழ்கின்றன. தீவிர மார்க்கப் பற்றுள்ள மூத்த ஆலிம் ஒருவருடன் ஒருமுறை பேசிக் கொண்டிருந்த போது, 'ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ' என்று பேச்சு வாக்கில் சொல்லிச் சிரித்தார். 'எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாண்டா.. இவன் ரொம்ப நல்லவன்டா' என்று பள்ளிவாசல் வராந்தாவில் நின்று கொண்டு இளைஞர்கள் ஒருவரையொருவர் கலாய்க்கின்றனர். இதையெல்லாம் நாம் எப்படி எடுத்துக்கொள்வது? பள்ளிவாசல் வராந்தா வரையிலும் வடிவேலுவைக் கொண்டு வந்துவிட்டது எது என்பதை ஆராய்ந்தால் சினிமா எத்தகைய சக்திமிக்க ஆயுதம் என்பது புலப்படும்.

''திரைப்படத்தின் முன்னேற்றம் பிரதி தினம், வாரமென்று நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.ஒரு திரைப்படத்தை லட்சக்கணக்கானோர் பார்க்கிறார்கள். வேறு எந்தக் கலைக்குமே இந்த அளவிலான பரந்து பட்ட வெளிப்பாட்டிற்கான சாத்தியப்பாடுகள் இல்லை. இது திரைப்படத்திற்கேயான மிகப்பெரிய சாதகமான அம்சமும், அனுக்கிரகமுமாகும்'' என்கிறார், உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்
அடூர் கோபால கிருஷ்ணன்.

சினிமா ஒரு சக்தி வாய்ந்த ஊடகம். அது ஒரு ஆயுதம். அது மனித அறிவின், ஆற்றலின் அழகிய வெளிப்பாடு. அப்படிப்பட்ட சினிமா எப்படி ஹராமாக இருக்க முடியும்? நிச்சயமாக இங்கே சினிமா ஹராமானதல்ல. சினிமாவில் காட்டப்படுவது வேண்டுமெனில் ஹராமாக இருக்கிறது என்று சொல்லலாம்.

முஸ்லிம்களை கொச்சைப்படுத்தி எடுக்கப்படும் சினிமாக்களில் 'உன்னைப் போல் ஒருவனும்' ஒன்றே தவிர அதுவே தொடக்கம் அல்ல. மணிரத்னம் 'ரோஜா' எடுத்த போதும், பின்னர் அது 'பம்பாய்' என்று பரிணாமம் பெற்ற போதும், விஜயகாந்தின் படங்கள் முஸ்லிம்களைக் குறி வைத்துக் குதறிய போதும், அர்ஜுனின் படங்கள் முஸ்லிம்கள் மீது வெறுப்பை உமிழ்ந்த போதும் முஸ்லிம்களிடமிருந்து உணர்ச்சி அலைகள் பொங்கி எழுந்திருக்கின்றன. முஸ்லிம்களைக் கேவலப்படுத்தி படங்கள் வெளிவருவதும், அவற்றுக்கு முஸ்லிம்கள் எதிர்வினை யாற்றுவதும் வழமையான ஒன்றாகிவிட்டது.

[சமநிலைச் சமுதாயம் ஜனவரி - 2011 இதழில், ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரையிலிருந்து......] More Here.

Translate

Related Posts Plugin for WordPress, Blogger...